புகையிரதப் பயணிகளுக்கு Online நுழைவுச்சீட்டு

புகையிரதப் பயணிகளின் நன்மை கருதி இணையவழி (Online) மூலம் நுழைவுச்சீட்டை விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளார்.

நாளையதினம் (12) இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதற்கான பத்திரத்தை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புகையிரதத்தில் ஆசன முன்பதிவை மேற்கொள்ளும் (e-ticketing system) முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.  


Add new comment

Or log in with...