COPA குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அலகியவன்ன

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்களுக்கான குழு  கூடிய வேளையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்‌ லசந்த அலகியவன்னவின்‌ பெயரை பாராளுமன்ற உறுப்பினர்‌ உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன்‌, பாராளுமன்ற உறுப்பினர்‌ சந்திம வீரக்கொடி  வழிமொழிந்தார்‌.

பாராளுமன்றக்‌ கூட்டத்தொடர்‌ கடந்த 2019ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 2ஆம்‌ திகதி முடிவுக்குக்‌ கொண்டுவரப்பட முன்னரும்‌ இவர்‌ அரசாங்கக்‌ கணக்குகள்‌ பற்றிய குழுவின்‌ தலைவராக செயற்பட்டிருந்தார்‌.

பாராளுமன்றத்தில்‌ இன்று கூடிய அரசாங்கக்‌ கணக்குகள்‌ பற்றிய குழுக்‌  கூட்டத்தில்‌ அமைச்சர்‌ பவித்திரா வன்னியாராச்‌சி, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான உதய‌ கம்மன்பில, அலிசாஹிர்‌ மெளலானா, டொக்டர்‌ நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும்‌ விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர்‌ கலந்துகொண்டிருந்தனர்‌.


Add new comment

Or log in with...