யாழ். தொண்டமனாறில் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் மூழ்கிய நிலையில் சிறுவன் ஒருவனின்சடலம் இன்று(28) மீட்கப்பட்டுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்– சுமித்தி தங்கராசா, யாழ்.விசேட நிருபர்– மயூரப்பிரியன்)

 

 


Add new comment

Or log in with...