கரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு

கரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு-Political Revenge Commission Order to Release Karannagoda DKP Dassanayake from Case

விசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் மீதான வழக்குகளை இடைநிறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சட்ட மாஅதிபருக்கு இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 - 2009 காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் குறித்த இருவர் உள்ளிட்ட 14 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த வாரம் (24) மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கில் முன்னிலையான கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 13 பேருக்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதன்போது, நீதிமன்றில் முன்னிலையாகாத முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...