ராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்

ராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்-Rajitha Gives Statement to CID

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (27) மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இன்று (27) காலை 11.30 மணியளவில் சிஐடியில் முன்னிலையான அவர், பிற்பகல் 1.30 மணி வரை வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே கடந்த ஜனவரி 14 ஆம் திகதி  சிஐடியில் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி நாரஹென்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய  உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் முன்வைத்த மீளாய்வு மனு  எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


Add new comment

Or log in with...