லொறியை முந்த முற்பட்டவர் லொறியில் சிக்கி பலி

லொறியை முந்த முற்பட்டவர் லொறியில் சிக்கி பலி-Bike Accident-Nittambuwa-Motorcyclist Dead

நிட்டம்புவ, அத்தனகல்ல வீதியில்‌ இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

நேற்று‌ (23) இரவு 7.10 மணியளவில்‌ சிறிமாவோ பண்டாரநாயக்க பிளேஸிற்கு திரும்பும் சந்தியில்‌ அத்தனகல்ல நோக்கி பயணித்த மோட்டார்‌ சைக்கிள்‌ அதே திசையில்‌ பயணித்த லொறியினை முந்திச்செல்ல முற்படுகையில்‌ மோட்டார்‌ சைக்கிள்‌ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த லொறி மோட்டார்‌ சைக்கிளைச்‌ செலுத்திச்‌ சென்ற சாரதி மீது ஏறிச்சென்றுள்ளது.

விபத்தில்‌ படுகாயமடைந்த மோட்டார்‌ சைக்கிளின்‌ சாரதி வத்துப்பிட்டிய வைத்தியசாலையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்‌ பயனளிக்காத நிலையில்‌ உயிரிழந்துள்ளார்‌.

உயிரிழந்தவர்‌ 22 வயதுடைய வியாங்கொடை பிரதேசத்தைச்‌ சேர்ந்தவராவார்‌ எனவும், மரணித்தவரின்‌ சடலம்‌  வத்துப்பிட்டிய வைத்தியசாலையின்‌ பிரேத அறையில்‌ வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

விபத்துடன்‌ தொடர்புடைய லொறியின்‌ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்‌ மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிசார்‌ மேற்கொண்டுவருகின்றனர்‌.


Add new comment

Or log in with...