ரஞ்சன் எவ்வித குரல் பதிவுகளையும் சமர்ப்பிக்கவில்லை

ரஞ்சன் எவ்வித குரல் பதிவுகளையும் சமர்ப்பிக்கவில்லை-Ranjan Ramanayake Not Submitted Any Audio Recording

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை எவ்விதமான குரல் பதிவுகளையும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய (24) சபை அமர்வின் போது, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட பதிலை வழங்குமாறு சபாநாயகரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

இன்று (24) பிற்பகல் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பு சபையும் இன்று கூடுவதோடு, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களான பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதிபதி யசந்த கோதாகொடவை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...