சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு; ஒருவர் கைது

சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு; ஒருவர் கைது-Weapons found in Sammanthurai-40 Year Old Arrested

சம்மாந்துறை, சென்னல் கிராமத்தில் தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் இதன்போது குறித்த வீட்டிலிருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  • 5.5 எம்.எம். தோட்டா 52
  • 7.5 எம்.எம். தோட்டா 12
  • வெடிமருந்து 600 கிராம்
  • ஈயக் பந்து மற்றும் துண்டுகள் ஒரு கிலோ 40 கிராம்
  • கழற்றிய டெட்னேட்டர் பகுதிகள் 03
  • கட்டுத்துவக்கு குழாய் 01 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.  

40 வயதான சந்தேகநபரை இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை   குறித்த பகுதியிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்களும் அண்மையில்  கைப்பற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...