Thursday, January 23, 2020 - 9:31am
நிதகஸ்கம, வெல்லவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (22) மாலை இச்சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெல்லவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 1,000 ரூபா பெறுமதியான 09 போலி நாணயத்தாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment