பஸ்ஸில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

பஸ் வண்டியொன்றில் கேரள கஞ்சா கொண்டு சென்ற மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து புத்தளம், பாலாவி பகுதியில் இன்று (22) நடத்திய சோதனையின்போது இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களிடமிருந்து  176 கிலோகிராம் கேரள  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கேரள கஞ்சாவானது கல்பிட்டியிலிருந்து கொழும்பிற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 29, 31, 37 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா, பஸ் வண்டி ஆகியவற்றுடன் சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...