பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படுமென, சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியொன்றை எழுப்பியதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் திரவ பால் நுகர்வை அதிகரிக்கும் நோக்கில் திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக திரவ பால் நுகர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
Add new comment