குளவிக் கொட்டினால் 19 பேர் பாதிப்பு

தேயிலை   கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  19 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பொகவந்தலாவை முத்துலெச்சுமி தோட்டத்தில் 03 ஆண் தொழிலாளர்களும் பொகவந்தலாவை எல்பட தோட்டத்தில் 16 பேருமாக  19 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு உள்ளான இவர்கள்,  டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையிலும் பொகவந்தலாவைவைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  - நோட்டன் இராமச்சந்திரன்)


Add new comment

Or log in with...