கடவுச்சீட்டு பெற கருவிழி ஸ்கேன் முறை அறிமுகம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இனிமேல் கருவிழி ஸ்கேன் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.  

போலியான தகவல்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டை கொண்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்தல் மற்றும் நாட்டில் இருந்து வெளியேறுவதை அடையாளம் காண்பதற்கு இந்த புதிய நடைமுறை உறுதுணையாக  அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.  

எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

அதற்கிணங்க உயிரியல் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான கருவிகள் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். (ஸ) 


Add new comment

Or log in with...