Saturday, January 18, 2020 - 3:57pm
கிராண்ட்பாஸ், ப்ளூமெண்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீயை அணைப்பதற்கு கொழும்பு தீயணைப்பு பிரிவு கடமையில் ஈடுபட்டுள்ளது.
இன்று 18 பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து அப்பகுதிக்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் போலீசார் தெரிவித்தனர்.
Add new comment