விபத்தில் தாயும் மகளும் பலி

நாரம்மல - குளியாப்பிட்டிய தங்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தாயும் அவரது மகளுமே நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நாரம்மல நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி எதிர்த்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியும் அவரது மனைவியும் 08 வயது மகளும் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது, சம்பவ இடத்தில் குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டிச் சாரதியும் அவரது மகளும் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மகள் உயிரிழந்துள்ளார்.

கொரொம்பாவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய தாயும் 08 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  

அத்தோடு குறித்த வேன் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Add new comment

Or log in with...