ராஜித சேனாரத்ன CID இல் வாக்குமூலம்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு இன்று (14) வருகை தந்துள்ளார்.

கடந்த டிசம்பர்  26ஆம் திகதி லங்கா ஹொஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்தார்

வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்புத் தொடர்பில் டிசம்பர் 27ஆம் திகதி வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு, கொழும்பு பிரதான நீதவானினால் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.கடந்த 18 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (13) நள்ளிரவு வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.


Add new comment

Or log in with...