நெல் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக உரத்தை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
'சௌபாக்கிய தெக்ம' வளமான தொலைநோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனத்தின் மூலம் உள்ளூர் நெல் உற்பத்தியாளர்களை வலுவுடன் மேம்படுத்துவதற்காக பல்வேறு அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் உர நிவாரண முறைக்கு பதிலாக நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உற்பத்திக்கு தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக 2020ஆம் ஆண்டு சிறுபோகம் ஆரம்பம் முதல் நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஆகக்கூடிய 2 ஹெக்டர் வரையில் யூரியா மும்மை, சுப்பர் பொஸ்பேட் (ரி.எஸ்.பி) மற்றும் மியூரியெட் ஒவ் பொட்டாஸ் (எம்.ஓ.பி) ஆகிய உர வகைகளின் சிபாரிசு அளவை வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி விவசாய நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Add new comment