விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த பிணை மனு இன்று (30) பரிசீலிக்கப்பட்டபோது அவருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணை அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன லங்கா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நவம்பர் 10ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வௌ்ளை வேன் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்ததாக ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment