மேல் மாகாணத்தில் இன்று 521 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

மேல் மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக 521 பேர் நியமனம் செய்யப்படவுள்ளனர்.இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (6) திங்கட்கிழமை மேல்மாகாண சபையின் கொழும்பு அழகியற் கலையரங்கு கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. மேல் மாகாண ஆளுநர் டாக்டர் சீதா அரம்பேபொல இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 

மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத்ன, ஆளுநர் செயலாளர் பீ.சோமசிறி, மாகாண கல்வி அமைச்சின் பதில் செயலாளர் சிறிசோம லொகுவிதான உள்ளிட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேல் மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்காக கடந்த ஜூன் மாதத்தில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இந் நியமனம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கல்வி, கணிதம், விஞ்ஞானம், ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)  


Add new comment

Or log in with...