நாளை (02) முற்பகல் 8.30 மணியிலிருந்து ஹிக்கடுவை பிரதேசத்தில், 9 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலை காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஹிக்கடுவை, பத்தேகம, நாகொட, ஹல்பெதோட்ட, சந்தரவல, கணேகம, மஹகொட, மீமெடும, கோணாபீனுவல, கலுபே, தெல்வத்தை ஆகிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ள சபை, இது தொடர்பில் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துவதாகவும் அறிவித்துள்ளது.
Add new comment