தொண்டைமானாறு கடலில் மூழ்கி இளைஞன் பலி

தொண்டைமானாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் நேற்று (03) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றது. 

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

தனது நண்பர்கள் ஐந்து பேருடன் தொண்டைமானாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.  

இந்த நிலையில் பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணிநேரமாக தேடினர். எனினும் இளைஞர் உயிரிழந்த நிலையிலே சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த இளைஞனின் சடலத்தை அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். 

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...