Friday, January 3, 2020 - 10:39am
அப்புத்தளை நகரிற்கு அருகிலுள்ள பிரதேசத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (03) காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர்.
குறித்த ஹெலிகொப்டர் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமானது என இலங்கை விமானப் படை உறுதிப்படுத்தியுள்ளது.
விமானப் படைக்கு சொந்தமான Y12 ரக ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் அதில் பயணித்த விமானப் படையைச் சேர்ந்த நால்வரும் இவ்விபத்தில் பலியாகியுள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
வீரவிலவிலிருந்து இரத்மலானைக்கு சென்ற ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment