Thursday, January 2, 2020 - 1:40pm
புகையிரதப் பயணிகளுக்கு சலுகை அடிப்படையில் மரக்கறிப் பொதிகளை பெற்றுக்கொடுக்க புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய புகையிரத நிலையத்தில் சலுகை அடிப்படையில் பயணிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியும்.
இன்று (02) மதியம் 2.00 மணி முதல் கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய 10 வகையான மரக்கறிகளை சலுகை அடிப்படையில் புகையிரத பயணிகள் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment