எதனோல் இறக்குமதி தடை; நிதி அமைச்சு அறிவிப்பு

மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் எதனோல் இறக்குமதியை உடன் அமுலுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை செய்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவரும் எதனோலை உடனடியாக தடை செய்யுமாறு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய நேற்று (01) முதல் எதனோல் இறக்குமதி தடை செய்யப்படுகிறது. 

உள்ளூரில் அதிகளவு எதனோல் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.  


Add new comment

Or log in with...