2020ஆம் ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சபையில் கடமையாற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளை உறுதிப்படுத்தும் நிகழ்வு நேற்று(01) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது அரச அதிகாரிகள் தமது கடமைகளை உறுதிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டை சிறந்த முறையில் கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்திற்கமைய, தேசிய மர நடுகை வாரத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாணத்தில் நேற்றைய தினம் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், அதிகாரிகள், சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவத்தை தினகரன் விசேட நிருபர்
Add new comment