நாடு திரும்பும் துருக்கி தூதுவர் பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டார்.  

இந்தச் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளினதும் பாதுகாப்பு படைகளுக்கிடையிலான பயிற்சி வாய்ப்புக்களை அதிகரித்தல், புலனாய்வு தகவல்களை பகிர்தல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.  

2019 ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு எவ்வித ஈடுபாடுகளும் இல்லை எனவும் முஸ்லிம் சமூகம் எப்போதும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவளித்தே வந்துள்ளதாகவும் துருக்கி தூதுவர் இந்தச் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.    


Add new comment

Or log in with...