Wednesday, April 17, 2024
Home » மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவது நியாயமல்ல!

மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துவது நியாயமல்ல!

by Gayan Abeykoon
March 1, 2024 1:00 am 0 comment

ிறியதொரு பிரச்சினை எதிர்கொள்ளப்பட்டாலும்,  ஊழியர்கள் உடனடியாகவே தொழிற்சங்க நடவடிக்ைகயில் ஈடுபடுவது இலங்கையில்  வழமையாக நாம் காண்கின்ற காட்சியாகும். ஊழியர்கள் தாமாகவே முன்வந்து  தொழிற்சங்க நடவடிக்ைகயில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை. அவ்வாறான போராட்ட  நடவடிக்ைகயின் பின்னணியில் தொழிற்சங்கங்களே இருப்பதுண்டு.

தொழிற்சங்கங்களின் தூண்டுதலின் பேரில்தான்  பணிப்பகிஷ்கரிப்பு, சட்டப்படி வேலை இயக்கம் போன்ற போராட்ட நடவடிக்ைககளில்  ஊழியர்கள் ஈடுபடுவதுண்டு. தங்கள் கோரிக்ைககள் நியாயமானவையா அல்லது  நியாயமற்றவையா என்ற ஆய்விலும் தொழிற்சங்கங்கள் ஈடுபடுவதில்லை. எதையுமே  ஆராய்ந்து பார்க்காமல் எடுத்த எடுப்பிலேயே வேலைநிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடுவது இலங்கையில் வழமையான ஒரு செயற்பாடாகும்.

தொழிற்சங்க நடவடிக்ைகயில் ஈடுபடுவதற்கான உரிமை  தொழிற்சங்கங்களுக்கு உண்டென்பதை மறுப்பதற்கில்லை. ஊழியர்களுக்கு அநீதி  இழைக்கப்பட்டாலோ அல்லது நியாயமான கோரிக்ைககளை வென்றெடுக்க வேண்டிய தேவை  இருந்தாலோ முதலில் அப்பிரச்சினைகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தரப்புடன்  பேச்சுவார்த்தை நடத்துவதே முறையாகும். அதன் பின்னரே தொழிற்சங்க  நடவடிக்ைககளில் ஈடுபடுவதையிட்டு சிந்திக்க வேண்டும்.

ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறில்லை. வேலைநிறுத்தமும்,  போராட்டமும் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே, தொழிலாளர்களின் கோரிக்ைக என்னவென்பது  வெளியே தெரியவருவதுண்டு. வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்து,  பொதுமக்களை சிரமங்களுக்கு உள்ளாக்கிய பின்னரே ஊழியர்களின் கோரிக்ைக  என்னவென்பது தெரியவருகின்றது. ஆகவேதான் ஊழியர்களின் போராட்டங்கள்  சந்தேகக்கண் கொண்டு நோக்கப்படுகின்றன.

இப்போராட்டங்களின் உண்மையான நோக்கம் என்ன? கோரிக்ைககளை  முன்வைத்து அவற்றை பலவந்தமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள்  முற்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. அல்லது பொதுமக்களை  சிரமங்களுக்கு உள்ளாக்கி அதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு  தொழிற்சங்கங்கள் முற்படுகின்றனவா என்ற சந்தேகமும் வருகின்றது.

பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கினால் அவர்கள்  அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொள்ளக் கூடும். அதன் மூலம் பொதுமக்களை  தங்களது பக்கம் வசீகரித்துக் கொள்ள முடியுமென்று எதிரணிகள்  எதிர்பார்க்கவும் கூடும்.

நாட்டில் அவ்வப்போது இடம்பெறுகின்ற பணிப்பகிஷ்கரிப்பு  மற்றும் போராட்டங்களைப் பார்க்கின்ற போது, மற்றொரு சந்தேகம் தவிர்க்க  முடியாமலேயே எழுகின்றது. அரசின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்த  வேண்டுமென்ற நோக்கிலேயே இவ்வாறான போராட்டங்களை எதிரணியினர் திட்டமிடுவதாக  சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஆசிரிய தொழிற்சங்கப் போராட்டத்தை  எடுத்துக் கொண்டாலும், அது சம்பந்தமான ஊடக சந்திப்பில் அரசியல் சாயமே  காணப்படுகின்றது.

அரசியல்வாதிகள் மீது வசைபாடுவது தொழிற்சங்கங்களுக்கு உரிய  விடயமல்ல. ஒரு தொழிற்சங்கத்தின் பணியானது தங்களது ஊழியர்களின் நலனுக்காகப்  போராடுவது மட்டுமென்று எண்ணுவதும் தவறு. மக்களின் நலன் மீது கரிசனை  செலுத்துவதும் தொழிற்சங்கங்களின் கடமையாகின்றது. மக்களின் நலன்களைக்  கவனிப்பதற்கே ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த ஊழியர்களின் நலன்களைக்  கவனிப்பதற்கே தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆகவே மக்களின் நலனை மறந்து  தொழிற்சங்கங்கள் செயற்படுமாக இருந்தால் அதில் அர்த்தமே இல்லாமல்  போய்விடும்.

ஆகவே மக்களின் நலன்தான் இங்கு முன்னுரிமை பெறுகின்றது.  மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதை சாதாரண விடயமாக தொழிற்சங்கங்கள்  எடுத்துக் கொள்ளுமாக இருந்தால், அது பெரும் அநீதி ஆகும். வேலைநிறுத்தம்  போன்ற நடவடிக்ைககளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் இவ்விடயத்தை நன்கு புரிந்து  கொள்வது அவசியம்.

பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இக்காலத்தில் உள்ள  விலையேற்றங்களை எடுத்துக் கொள்வோமானால் மக்கள் மீதான வாழ்க்ைகச்சுமை  அதிகமாக உள்ளதென்பதை மறுக்க முடியாது. அன்றாட வாழ்க்ைகயைக் கொண்டு  செலுத்துவதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். அது எவருக்கும்  புரியாத ஒரு விடயமல்ல.

இவ்விடயத்தை மறுபுறத்தில் நாம் நோக்குவோமானால், இன்றைய  பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கம் காரணமல்ல என்பதை முதலில்  புரிந்து கொள்ள வேண்டும். கடந்தகால ஆட்சியின் ​போது கடைப்பிடிக்கப்பட்ட  தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி  தலைதூக்கியது. உள்நாட்டு உற்பத்தியிலும், வரிக்ெகாள்கையிலும், அந்நிய  செலாவணியை ஈட்டுவதிலும் அன்றைய ஆட்சியாளர்கள் அலட்சியப் போக்ைகக்  கடைப்பிடித்ததன் காரணமாகவே நாட்டில் பொருளாதார நெருக்கடி உருவெடுத்தது.

அன்றைய ஆட்சிக் காலத்தில் உருவெடுத்த பொருளாதார  நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே இன்றைய அரசு போராடிக்  கொண்டிருக்கின்றது. அப்போராட்டத்தில் இன்றைய அரசு ஓரளவு வெற்றியும்  கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சி பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் மக்களுக்கு மென்மேலும் சிரமங்களை  உண்டாக்கும் விதத்தில் தொழிற்சங்கங்கள் நடந்து கொள்வது முறையல்ல. அவ்வாறு  தொடருமானால் தொழிற்சங்கங்கள் மீதே மக்கள் வெறுப்பு கொள்ளும் நிலைமை  உருவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT