Thursday, April 18, 2024
Home » லைப்பொண்ட் நிறுவனத்தின் நிகழ்நிலை பயிற்சி நெறி அங்குரார்ப்பணம்

லைப்பொண்ட் நிறுவனத்தின் நிகழ்நிலை பயிற்சி நெறி அங்குரார்ப்பணம்

by Gayan Abeykoon
March 1, 2024 8:44 am 0 comment

திருமண பந்தத்தில் இணைய இருப்பவர்களுக்கான நிகழ்நிலை பயிற்சி நெறிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு வட்டதெனிய கம்பளையில் அமைந்துள்ள கதீஜத்துல் குப்ரா மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (28)  இடம்பெற்றது.

லைப்பொண்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.சறூக்கின் வழிகாட்டலின் கீழ் ஜே.ஜே நிறுவனத்தின்  அனுசரணையில் நடைபெறும் இக்கற்கைநெறி துறைசார் வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் லைப்பொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அஷ்ஷெய்க் பகீஹுத்தீன், நிறுவனத்தின் கலைத்திட்ட நெறியாளர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத், நிறுவன முகாமையாளர் இர்ஷாத் முஹமட், கதீஜத்துல் குப்ரா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் ஏ.எஸ்.எம். பாறூக் (அல் அஸ்ஹரி), கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் நிஹால் ஆகியோர்களுடன் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அகில இலங்கை ரீதியாக நடைபெறும் இக்கற்கை நெறி நேரடியாகவும் நிகழ்நிலை ஊடாகவும் லைப்பொண்ட் நிறுவனத்தினால் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிறுவனம் திருமணம் முடிக்க காத்திருப்போர்களுக்கான கற்கை நெறி, திருமணத்திற்கு பின்னரான கற்கைநெறி, குடும்ப பிணக்குத் தொடர்பான சட்ட ஆலோசனை, மகிழ்ச்சியான குடும்ப உருவாக்கம், கொண்டு செயற்படும் ஒரு சமூக நிறுவனமாகும்.

கிண்ணியா தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT