எல்பிட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நான்காவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 14 வாக்குகளும் ஆதரவாக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் அவற்றின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து கலைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கலைக்கப்படாத ஒரே யொரு உள்ளூராட்சி நிறுவனமாக எல்பிட்டிய பிரதேச சபை மட்டுமே காணப்படுகிறது. பொதுஜன பெரமுனவின் அதிகாரத்திலுள்ள மேற்படி பிரதேச சபையில் வரவு செலவு திட்டத்தின்போது அந்த கட்சியின் அங்கத்தவர்கள் ஏழு பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
நான்காவது தடவையும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் 2012 / 22 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டத்திற்கிணங்க இந்த உள்ளூராட்சி சபைக்கு விசேட ஆணையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்