Friday, April 19, 2024
Home » முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரண்

முஷாரப்பை கட்சியில் இருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரண்

- மக்கள் காங்கிரஸ் தீர்மானம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

by Prashahini
February 29, 2024 4:35 pm 0 comment

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை அக்கட்சியில் இருந்து நீக்கியமை சட்டத்துக்கு முரணானது என, உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து தம்மை நீக்கியமை தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் க்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம்  இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மனுவை விசாரணை செய்த பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT