சமீபத்திய சம்பள திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 70% அதிகரிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், பதிலளித்து மத்திய வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வகையில் அந்த அறிக்கை வௌியிடப்பட்டு ள்ளது.சமீபத்திய சம்பள திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 50% அதிகரித்துள்ளது. இதன் நியாயத்தை பாராளுமன்றத்தில் விளக்குவதற்கு மத்திய வங்கி அவகாசம் கோரியுள்ளது.
இந்நிலையில், மத்திய வங்கியின் அதிக சம்பளம் பெறும் அதிகாரிகள் தமது சம்பளத்தில் 36 வீதத்தை வரியாக செலுத்துவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.