Friday, March 29, 2024
Home » கொழும்பு ஸாஹிராவில் முதலாம் திகதி மிஷ்காத்துல் மஸாபீஹ்’ நூல் வெளியீடு

கொழும்பு ஸாஹிராவில் முதலாம் திகதி மிஷ்காத்துல் மஸாபீஹ்’ நூல் வெளியீடு

by mahesh
February 28, 2024 11:00 am 0 comment

தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ஸிஹாஹ் சித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் மிஷ்காத்துல் மஸாபீஹ் நூல் வெளியீடும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நாளை மறுதினம் மார்ச் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் பி.ப 4.00மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஸாஹிரா கல்லூரியின் அதிபர் டிரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஜாமிஆ கல்லூரி கலாபீடத்தின் முதல்வர் ஏ.சி. அகார் முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். ரஹ்மத் அறக்கட்டளை நிறுவுனர் எம்.ஏ. முஸ்தபா, தமிழகத்தைச் சேர்ந்த உலமாக்கள் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி, ஹாபிழ் ஏ.பீர் முஹம்மது பாகவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.தமீமுன் அன்ஸார், கலாநிதி ஏ.ஏ.ஏ. அஸ்வர், ஸாஹிரா கல்லூரி ஆளுனர் சபை செயலாளர் அலவி முஹ்தார், மௌலவி எம்.ரி.ஏ. ஆரிப், தமிழ் பிரிவின் உப அதிபர் ஏ.எம். மிஹ்ழார் (நளீமி) ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் நிகழ்வைத் தொடர்ந்து 03ம் திகதி ஞாயிறு காலை 9.30 க்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக விழா அரங்கிலும் இந்நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT