Home » கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை தினம்

by mahesh
February 28, 2024 1:40 pm 0 comment

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசாலை முன்றலிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. விரிவுரையாளர்களும் ஆசிரிய மாணவர்களும் மலர் வழிபாடு மேற்கொண்டனர்.

திருவள்ளுவர் குறித்து ஆசிரிய மாணவர்களின் சிற்றுரைகளும் இடம்பெற்றன. உரைகளை ஆற்றிய ஆசிரிய மாணவர்களுக்கு புத்தக பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

இப்பரிசில்களை கலாசாலை மூத்த விரிவுரையாளர் மு.ஜெயக்குமாரி வழங்கினார். திருவள்ளுவர் குருபூசை மாசி மாத உத்திர நட்சத்திர நாளில் அனுஷ்டிக்கப்படுவது வழக்கமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT