Friday, March 29, 2024
Home » காலாவதியாகிய உணவை விற்ற 13 வயது சிறுமி கைது

காலாவதியாகிய உணவை விற்ற 13 வயது சிறுமி கைது

- வேலைக்கு அமர்த்திய பெற்றோரை கைது செய்ய உத்தரவு

by Prashahini
February 27, 2024 11:14 am 0 comment

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ். நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில் ,யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி கைது செய்யப்பட்டார்.

சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும், உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் பஸ் ஏறி யாழ்ப்பாணம் வந்து, அவற்றை விற்பனை செய்து விட்டு , மீண்டும் இரவு 8.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு செல்லப்பட்ட நிலையில் ,13 வயது சிறுமியை தனியாக வேலைக்கு அமர்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்களை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT