Friday, March 29, 2024
Home » நாட்டில் 4 பொலிஸ் பிரிவுகளில் பெண் ஒருவர் உட்பட 4 சடலங்கள் மீட்பு

நாட்டில் 4 பொலிஸ் பிரிவுகளில் பெண் ஒருவர் உட்பட 4 சடலங்கள் மீட்பு

by damith
February 26, 2024 7:45 am 0 comment

இரத்தினபுரி, குருவிட்ட, கொழும்பு பேலியகொடை, சிலாபம் மாரவில மற்றும் ராகமை பகுதிகளில் அடையாளம் காணப்படாத ஒரு பெண் உட்பட 04 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல பகுதியில் கங்கையில் நிர்வாணமாக காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 35 முதல் 40 வயதுக்கிடைப்பட்ட ஆண் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் யாருடையதென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பேலியகொடை 04 ஆம் மைல் கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த 35 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சட்டை மற்றும் கறுப்பு நிறத்திலான காற்சட்டை அணிந்துள்ளார். வலது கையில் பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT