90
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் குளத்தில் உழவு இயந்திரம் (ட்ரக்டர்) தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 08 குழந்தைகள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
உத்தரபிரதேஷ் காதர்கஞ்ச் பகுதியிலுள்ள கங்கை நதியில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் சென்றபோதே, இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (25) உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் குறித்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலுள்ள குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.