நாடளாவிய ரீதியில் 2023ஆம் ஆண்டில் 10,69,000 மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, துண்டிக்கப்பட்ட இணைப்புகளுக்கு மீள் இணைப்பை வழங்குவதற்கு கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதோடு, நிலுவைக் கட்டண தொகையை தவணையாக செலுத்த அனுமதிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கடன் அடிப்படையில் புதிய இணைப்புகளை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவும், மின் கட்டணத்துடன் முழு இணைப்புக் கட்டணத்தையும் தவணை முறையில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.