202
போதைப்பொருள் குற்றம் தொடர்பாக 1,000 முதல் 1,500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்தார்.
காலி, நாகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற
நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறு சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை தொடர்பாக குற்றஞ்சாட்டு உடையவர்களெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.