162
கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளராக ஜெயக்குமார் ராசஜோகினி அண்மையில் நியமிக்கப்பட்டார்.
2023ஆம் ஆண்டுக்கான வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை பதவியுர்வு பரீட்சை (Supra Exam) பெறுபேறுகள் அடிப்படையில் மாகாண ரீதியில் முல்லைத்தீவு மாவட்ட திணைக்களங்களிலிருந்து தோற்றிய அதிகாரிகளில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ராசஜோகினி ஆறாவது இடத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவர் நேற்றுமுன்தினம் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
(மாங்குளம் குறூப் நிருபர்)