Thursday, April 25, 2024
Home » இலவச மீன் வழங்குவதில் குழப்பம்

இலவச மீன் வழங்குவதில் குழப்பம்

by Gayan Abeykoon
February 23, 2024 1:00 am 0 comment

நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் இயங்கும் பிரதேசங்களில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சில குடும்பங்களுக்கு இலவசமாக மீன் வழங்கப்பட்டு விற்பனை செய்வதற்கு தேவையான பொருட்களும் வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளும்    நடவடிக்கை நேற்று நடைபெற்றது. இதன் போது ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சில குடும்பங்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அனைத்து பகுதிகளிலும்  சுமூகமான முறையில் இடம் பெற்றது.

இதில் கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் மாத்திரம், சமுர்த்தி உத்தியோகத்தரின் உறவினர் ஒருவரை அழைத்து சென்றமையால் அப்பிரதேசத்தில் வாழும் ஏனைய பொதுமக்கள் குழப்பமான நிலையில் உள்ளனர். குறிப்பாக சமுர்த்தி உதவித்தொகை வழங்குவதிலும் இவர் தமக்கு தேவையானவர்களை மாத்திரம் தன்னுடன் இணைத்துக் கொள்வதாகவும் ஏனையோரை புறந்தள்ளி வைப்பதாகவும் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT