– 1,143 வகையான அழகுசாதனப் பொருட்கள் மீட்பு
மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயன கலவைகள் அடங்கிய அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த 4 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, நேற்று (21) பிற்பகல் புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, உலக சுகாதார அமைப்பினால் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இராசாயனப் பொருட்களைக் கொண்ட அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த 4 விற்பனை நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 1,143 வகையான அழகுசாதனப் பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள், குறித்த விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 45, 52 வயதுடைய கலகெடிஹேன, மொரட்டுவை, வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.