87
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பதவிகளிலிருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொன்சேகாவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (19) இந்த உத்தரவைப் பிறப்பித்தது.