Home » கெஹெலியவின் உடல்நிலையை ஆராய விசேட வைத்தியர் குழு

கெஹெலியவின் உடல்நிலையை ஆராய விசேட வைத்தியர் குழு

by sachintha
February 20, 2024 7:45 am 0 comment

இம்மாதம் 26 இல் அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஒன்பது பேரடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழுவை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில்,

இருதய நோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் உள்ளடக்குமாறும் நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மாளிகாகந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியாதுள்ள நிலைமைகள் குறித்து,சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை

நீதிமன்றம் ஏற்றுள்ளது.இதையடுத்தே,விசேட குழுவை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கெஹெலியவின் உடல் நிலை தொடர்பிலான விசாரணை அறிக்கைய இம்மாதம் (26) க்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT