நாட்டில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்துக்கான தேவை 03 முதல் 04 ஜிகாவோட் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இந்நாட்களில் நீர் மின் உற்பத்தி 21 வீதமாகக் குறைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த கூறியுள்ளார்.
தற்போது நீர் மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 83 சதவீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சூரியசக்தி மூலம் 4.5 வீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்றாலை மூலம் 05 வீத மின்சாரம் உற்பத்தியாகிறது. 64 வீத மின்சாரம் அனல் மின் உற்பத்தி மூலம் பெறப்படுகிறது.
இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை, மக்களை அறிவுறுத்தியுள்ளது.