319
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 46 வயதான தங்கரத்தினம் தனஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட வேளை பஸ்ஸின் சாரதி பஸ்ஸை நகர்த்தியமையால் ,தவறி விழுந்துள்ளார்.
அதில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.விசேட நிருபர்