உக்ரைனின் கிழக்கில் உள்ள அவ்தீவ்கா நகரத்தை ரஷ்யத் துருப்புகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
உக்ரைனின் அந்தப் பின்னடைவு ரஷ்யாவுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவுக்குக் கிடைத்திருக்கும் அந்த வெற்றி மேலும் பல நகரங்களைக் கைப்பற்றுவதற்கு வழியமைக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நகரிலிருந்து உக்ரைன் ஏற்கனவே அதன் துருப்புகளை மீட்டுக்கொண்டுள்ளது. துருப்புகள் அருகே உள்ள ரசாயன ஆலையை அடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
ஜெர்மனியில் நடைபெறும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி ரஷ்யாவை எதிர்த்துப் போராடக் கூடுதல் நிதியுதவியும் இராணுவ உதவியும் தேவை என்று மீண்டும் வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கு வழங்க வேண்டிய அடுத்த கட்ட உதவிக்கு அமெரிக்க பாராளுமன்றம் இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.