Friday, March 29, 2024
Home » நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 4.00 மணிக்குப் பின் மழை

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 4.00 மணிக்குப் பின் மழை

- ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலை

by Rizwan Segu Mohideen
February 18, 2024 8:24 am 0 comment

– மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலமான காற்று

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ ஒரு சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை இல்லாத வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT