Friday, April 26, 2024
Home » முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரிய ஞானசார தேரர்

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கோரிய ஞானசார தேரர்

- 8 வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து

by gayan
February 17, 2024 10:16 am 0 comment

– நீதிமன்ற விசாரணை நிறைவு; மார்ச் 28 இல் தீர்ப்பு

2016ஆம் ஆண்டு கூரகல ரஜ மகா விகாரையில் தெரிவித்த கருத்துக்காக முஸ்லிம் சமூகத்திடம் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் மன்னிப்பு கோரியுள்ளார்.

8 வருடங்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்துக் காரணமாக மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் தான் மன்னிப்பு கோருவதாக கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு ஞானசாரதேரர் தகவல் அனுப்பியுள்ளார். தனது நடவடிக்கைக்காக முஸ்லிம்களிடம் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

ஞானசாரதேரரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணை பூர்த்தியடைந்த நிலையில் எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படுமென, நீதிபதி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி மேற்படி விகாரையில் ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தானது இன, மத ஐக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி சட்ட மாஅதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT