Home » பேராதனையில் 1,600 வலி நிவாரண மாத்திரைகளுடன் வைத்தியர் கைது

பேராதனையில் 1,600 வலி நிவாரண மாத்திரைகளுடன் வைத்தியர் கைது

by Gayan Abeykoon
February 15, 2024 11:04 am 0 comment

அதிக வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 48 வயதுடைய  வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்களுக்கு அடிமையான இளைஞருக்கே இவர், வலி நிவாரணி மருந்துகளை விற்றுள்ளார்.

அதிக விலைக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பல வாரங்களாக பொலிஸார் இவரைக் கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் (13) இரவு கம்பளை எத்கல பிரதேசத்தில் இவர் கைதானார்.

கைது செய்யப்பட்ட போது, ​​மருத்துவரிடம் சுமார் 1,600 வலி நிவாரண மாத்திரைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரை,   புற்றுநோய் போன்ற நோய்களால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.   இந்த மருந்துகளை ஒசுசல தவிர  ஏனைய மருந்து கடைகளில் கூட விற்பனை செய்ய முடியாதவாறு சுகாதார அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த டொக்டர் கெலிஒய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.மேலதிகமாக பல பிரதேசங்களில் இந்த டொக்டர் தனிப்பட்ட ரீதியில் மருத்துவ சேவையை வழங்கி,இந்த மாத்திரைகளை

விற்பனை செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

இரவு நேரங்களில் இரகசியமாக காரில் சென்று பல்வேறு பகுதிகளில் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் போதை மாத்திரைகளை பெற்றுக்கொண்டு,இவர் இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

கம்பளை நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT