தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள இலங்கையருக்கு வீடமைப்புத் திட்ட கடன் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அனுமதிபெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த வீடமைப்பு கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபா வரையில் கடன் சலுகைகளை வழங்குவதற்கும் அதற்கான வட்டியின் ஒரு பகுதியை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உத்தேச கடன் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனை, கடன் பெறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவோர், அவர்கள் தொழில்புரியும் காலத்தில் முறையாக வெளிநாட்டு பணத்தின் மூலம் அதனை திருப்பிச் செலுத்த முடியும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நிறைவுசெய்து நாடு திரும்பியதும் இலங்கை ரூபாவில் அதனை வழங்குவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்